பக்கங்கள்

Tuesday, March 1, 2011

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 13 இல் தேர்தல்

தமிழக சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 13 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறம் என்று, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இந்த அறிவிப்பை ஒட்டி தேர்தலுக்கான நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை சரியாக ஒரு மாதம் கழித்து, மே 13 அன்று நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.   தேர்தலுக்கான அறிவிப்பு 19.03.2011 அன்று வெளியிடப்படும்.   வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, 26.03.2011.  வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப் படும் நாள் 28.03.2011.  வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 30.03.2011. வாக்கு எண்ணிக்கை 13.05.2011.

தேர்தல் நடைமுறைகள் 16.05.2011க்கு முன்பு முடிவுக்கு வரும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment