ஆள் காட்டி விரல் தான் ஆயுதம்
உள்ளங் கையை
உயர்த்திக்காட்டி
ஒட்டு பிச்சைப்கேட்கிறான்
காங்கிரஸ்காரன்.
அடையாளம் தெரிகிறதா
அந்த கையை
கொந்து குண்டுகளால்
நம் இனத்தை
கொன்று குவித்தவனை
தட்டி கொடுத்த கை.
உரிமையை கேட்டவனை
உணர்வோடு இருத்தவனை
உருக்குலைத்து போட்டவனுடன்
உறவாடும் கை.
தந்தையர் பூமி என்று
தஞ்சம் புகுத்த்வனை
அகதி என சொல்லி
அலையை விட்ட கை.
மருத்தவம் வேண்டி வந்த மாதாயை
மனித உணர்வு ஏதும் இன்றி
திருப்பி அனுப்பிய கை.
கட்சதீவினை
கைமாற்றி விட்ட கை.
மினவர் தமிழனை
காப்பற்ற துப்பின்றி
கையை விரித்த கை.
தமிழர்களின்
ஆயுள் ரேகையை
அழித்த கை.
அடையலாம் தெரிகிறதா
அந்த கையை.
கணக்கை
நேர் செய்வோம்.
ஆள் காட்டி விரல்தான்
ஆயுதம்
கைக்கு எதிரான
வலுவான கரத்தை
வலுவாக்கு
அதை
நிச்சயம் செய்யும்
உன் வாக்கு.
ஆள் காட்டி விரல் தான்
ஆயுதம்.
கையால் ஆகாத கையை ?
காரி துப்பு.....
No comments:
Post a Comment